பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. 33- வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு செய்ன் நதியில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்தப்படவுள்ளது.