பசிபிக் பெருங்கடலில் ஆய்வு செய்ய முடிவு இந்தியாவின் திட்டம் என்ன?
Jan 14, 2026, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசிபிக் பெருங்கடலில் ஆய்வு செய்ய முடிவு இந்தியாவின் திட்டம் என்ன?

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய தனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்குரிய அனுமதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

165 புள்ளி 25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு… சுமார் 25,000 குட்டித் தீவுகள்… உலகில் உள்ள எரிமலைகளில் 70 விழுக்காடு போன்றவற்றைக் கொண்டது பசிபிக் பெருங்கடல் பகுதி. இது தவிர கடலுக்கு அடியில் 40 ஆயிரம் மைல் நீளத்துக்கு மலைத்தொடர் ஒன்றையும் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பசிபிக் பெருங்கடலில் ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அங்கு முக்கிய தனிமங்கள் இருப்பதே அதற்கு காரணம்.

இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும் நினைத்த உடன் பெருங்கடலில் ஆய்வு நடத்த முடியாது. அதற்கு, ஐ.நா.வின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்ட INTERNATIONAL SEABED AUTHORITY என்ற அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்தியப் பெருங்கடலில் ஆய்வு செய்ய இந்தியாவுக்கு இரண்டு அனுமதிகள் உட்பட இதுவரை 31 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கடலை தோண்டி ஆய்வு நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய தனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி கேட்டு இந்தியா விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இதற்கான அனுமதியை பெற்றுள்ளன.

பசிபிக் பெருங்கடலில் உள்ள CLARION – CLIPPERTON ZONE என்னும் இடத்தில் ஆய்வு செய்வதே இந்தியாவின் திட்டம். ஹவாய் மற்றும் மெக்சிகோவுக்கு இடையே உள்ள இந்த பரந்த பரப்பில் MANGANESE, NICKEL, COPPER, COBALT போன்ற தனிமங்கள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

அண்டை நாடான சீனாவுடன் ஒப்பிடுகையில் கடற்பரப்பு ஆய்வில் இந்தியா சற்று பின்தங்கி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே கடற்பரப்பை தோண்டி ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என சில நாடுகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags: What is India's plan to explore the Pacific Ocean?
ShareTweetSendShare
Previous Post

தாக்கினால் மரணம் உறுதி அச்சுறுத்தும் நிபா அறிகுறிகள் என்ன?

Next Post

ஒலிம்பிக்கில் தங்கம் 44 ஆண்டுகள் தாகம் தீர்க்குமா இந்திய ஹாக்கி அணி!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies