பசிபிக் பெருங்கடலில் ஆய்வு செய்ய முடிவு இந்தியாவின் திட்டம் என்ன?
Aug 30, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசிபிக் பெருங்கடலில் ஆய்வு செய்ய முடிவு இந்தியாவின் திட்டம் என்ன?

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய தனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்குரிய அனுமதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

165 புள்ளி 25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு… சுமார் 25,000 குட்டித் தீவுகள்… உலகில் உள்ள எரிமலைகளில் 70 விழுக்காடு போன்றவற்றைக் கொண்டது பசிபிக் பெருங்கடல் பகுதி. இது தவிர கடலுக்கு அடியில் 40 ஆயிரம் மைல் நீளத்துக்கு மலைத்தொடர் ஒன்றையும் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பசிபிக் பெருங்கடலில் ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அங்கு முக்கிய தனிமங்கள் இருப்பதே அதற்கு காரணம்.

இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும் நினைத்த உடன் பெருங்கடலில் ஆய்வு நடத்த முடியாது. அதற்கு, ஐ.நா.வின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்ட INTERNATIONAL SEABED AUTHORITY என்ற அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்தியப் பெருங்கடலில் ஆய்வு செய்ய இந்தியாவுக்கு இரண்டு அனுமதிகள் உட்பட இதுவரை 31 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கடலை தோண்டி ஆய்வு நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய தனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி கேட்டு இந்தியா விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இதற்கான அனுமதியை பெற்றுள்ளன.

பசிபிக் பெருங்கடலில் உள்ள CLARION – CLIPPERTON ZONE என்னும் இடத்தில் ஆய்வு செய்வதே இந்தியாவின் திட்டம். ஹவாய் மற்றும் மெக்சிகோவுக்கு இடையே உள்ள இந்த பரந்த பரப்பில் MANGANESE, NICKEL, COPPER, COBALT போன்ற தனிமங்கள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

அண்டை நாடான சீனாவுடன் ஒப்பிடுகையில் கடற்பரப்பு ஆய்வில் இந்தியா சற்று பின்தங்கி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே கடற்பரப்பை தோண்டி ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என சில நாடுகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags: What is India's plan to explore the Pacific Ocean?
Share
Tweet
SendShare
Previous Post

தாக்கினால் மரணம் உறுதி அச்சுறுத்தும் நிபா அறிகுறிகள் என்ன?

Next Post

ஒலிம்பிக்கில் தங்கம் 44 ஆண்டுகள் தாகம் தீர்க்குமா இந்திய ஹாக்கி அணி!

Related News

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies