திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் 2 கோடியே 75 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 2 கோடியே 78 லட்சத்து ஆயிரத்து 835 ரூபாய் பணம், 932 கிராம் தங்கம், வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பட பலர் ஈடுபட்டனர்.