பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு கேட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3, 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியக் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார். இந்தி மொழியில் வெளியாகும் மனதின் குரல் நிகழ்ச்சியை இந்தி மொழி அறியாத மக்கள் கேட்கும் பொருட்டு, உடனடியாக அனைத்து 29 முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படுகிறது
இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர்கள் உடனிருந்தனர். மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் இருந்தவாறு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டார்.