வயநாட்டில் பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது! - அமித்ஷா
Nov 8, 2025, 02:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது! – அமித்ஷா

Web Desk by Web Desk
Jul 31, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்பி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

கேரளாவுக்கு ஜுலை 23-ம் தேதியே 9 பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் “அரசியல் எதுவும் இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா, “பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான அமைப்பை உருவாக்குவதற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவழித்துள்ளது” எனவும் தெரிவித்தார்.

Tags: An early warning was issued regarding the disaster in Wayanad! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

பாஜக எம்பி அனுராக் தாக்கூரை பாராட்டிய பிரதமர் மோடி!

Next Post

வயநாட்டில் நிலச்சரிவு! : பலி எண்ணிக்கை 238 ஆக உயர்வு!

Related News

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies