சொல்லி அடித்த இஸ்ரேல்! : ஈரானில் வைத்தே தீர்த்து கட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்!
Nov 16, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொல்லி அடித்த இஸ்ரேல்! : ஈரானில் வைத்தே தீர்த்து கட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 08:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் 9-வது அதிபராக மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, தலைநகர் டெஹ்ரானில் வைத்தே கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானுக்கு வந்த விருந்தினர் அந்நாட்டு மண்ணிலேயே கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் போர் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் ? என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காசா நகருக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து அழிப்பதே இஸ்ரேலின் உறுதியான கொள்கை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி இருந்தார்.

மேலும், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிக விலையை ஹிஸ்புல்லா கொடுக்க வேண்டும் என்றுமு் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தான் , ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் 62 வயதான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானில் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின் தமது இல்லத்தில் ஹனியே தங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் ஆபத்தான வளர்ச்சி என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் பாலஸ்தீனியர்கள் ஒன்றிணைந்து பொறுமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கு ‘கடுமையான தண்டனை’ வழங்கப்படும் என ஈரானின் முதன்மை தலைவர் அயதுல்லா அலி கமேனி உறுதியளித்திருக்கும் நிலையில், ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு பெருமைமிக்க நாடுகளுக்கிடையேயான பிணைப்பு முன்பை விட வலுவாக இருக்கும் என்றும், இந்த கோழைத்தனமான செயலுக்கு அவர்கள் வருந்துவார்கள் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் , இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

துருக்கி,சீனா,ரஷ்யா,கத்தார்,ஜோர்டான், ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாட்டு தலைவர்களும் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் தாக்கப்பட்டால் அதை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும், மத்திய கிழக்கில் ஒரு பரந்த போர் தவிர்க்க முடியாதது என்று தாம் நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் 39,445 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் 91,073 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த அக்டோபரில் இருந்து​​ இஸ்மாயில் ஹனியே குடும்ப உறுப்பினர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், காசாவின் ஷாதி முகாமில் நடத்தப்பட்ட கார் மீதான தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள், நான்கு பேரக்குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் கொல்லப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ​​பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல் நடத்தியது.

இப்போது , ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் மண்ணில் கொல்லப் பட்டிருக்கிறார். ஈரான் பதிலுக்கு தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தெரியும்.

ஏற்கெனவே , ரஷ்யா-உக்ரைன் போர் , சீன-தைவான் போர் பதற்றம் , சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி உட்பட பல நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

ஹமாஸ் உடன் போர், ஹிஸ்புல்லாவுடன் போர் என இராணுவ நடவடிக்கை எடுத்த இஸ்ரேல் இப்போது ஈரான் என்னும் தேன் கூட்டைத் தொட்டிருக்கிறது.

என்ன நடக்குமோ என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. கூடவே கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமும் இருக்கிறது என்று கூறுகிறார்கள் புவிசார் அரசியல் பார்வையாளர்கள்.

Tags: Israel said and beaten! The leader of Hamasbuilt in Iran!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ராஜதந்திரம்! – சீனாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமா?

Next Post

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்! : கமலா ஹாரிஸ் இந்தியரா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப்

Related News

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies