சொல்லி அடித்த இஸ்ரேல்! : ஈரானில் வைத்தே தீர்த்து கட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்!
Sep 12, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொல்லி அடித்த இஸ்ரேல்! : ஈரானில் வைத்தே தீர்த்து கட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 08:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் 9-வது அதிபராக மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, தலைநகர் டெஹ்ரானில் வைத்தே கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானுக்கு வந்த விருந்தினர் அந்நாட்டு மண்ணிலேயே கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் போர் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் ? என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காசா நகருக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து அழிப்பதே இஸ்ரேலின் உறுதியான கொள்கை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி இருந்தார்.

மேலும், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிக விலையை ஹிஸ்புல்லா கொடுக்க வேண்டும் என்றுமு் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தான் , ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் 62 வயதான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானில் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின் தமது இல்லத்தில் ஹனியே தங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் ஆபத்தான வளர்ச்சி என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் பாலஸ்தீனியர்கள் ஒன்றிணைந்து பொறுமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கு ‘கடுமையான தண்டனை’ வழங்கப்படும் என ஈரானின் முதன்மை தலைவர் அயதுல்லா அலி கமேனி உறுதியளித்திருக்கும் நிலையில், ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு பெருமைமிக்க நாடுகளுக்கிடையேயான பிணைப்பு முன்பை விட வலுவாக இருக்கும் என்றும், இந்த கோழைத்தனமான செயலுக்கு அவர்கள் வருந்துவார்கள் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் , இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

துருக்கி,சீனா,ரஷ்யா,கத்தார்,ஜோர்டான், ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாட்டு தலைவர்களும் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் தாக்கப்பட்டால் அதை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும், மத்திய கிழக்கில் ஒரு பரந்த போர் தவிர்க்க முடியாதது என்று தாம் நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் 39,445 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் 91,073 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த அக்டோபரில் இருந்து​​ இஸ்மாயில் ஹனியே குடும்ப உறுப்பினர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், காசாவின் ஷாதி முகாமில் நடத்தப்பட்ட கார் மீதான தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள், நான்கு பேரக்குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் கொல்லப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ​​பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல் நடத்தியது.

இப்போது , ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் மண்ணில் கொல்லப் பட்டிருக்கிறார். ஈரான் பதிலுக்கு தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தெரியும்.

ஏற்கெனவே , ரஷ்யா-உக்ரைன் போர் , சீன-தைவான் போர் பதற்றம் , சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி உட்பட பல நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

ஹமாஸ் உடன் போர், ஹிஸ்புல்லாவுடன் போர் என இராணுவ நடவடிக்கை எடுத்த இஸ்ரேல் இப்போது ஈரான் என்னும் தேன் கூட்டைத் தொட்டிருக்கிறது.

என்ன நடக்குமோ என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. கூடவே கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமும் இருக்கிறது என்று கூறுகிறார்கள் புவிசார் அரசியல் பார்வையாளர்கள்.

Tags: Israel said and beaten! The leader of Hamasbuilt in Iran!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் ராஜதந்திரம்! – சீனாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமா?

Next Post

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்! : கமலா ஹாரிஸ் இந்தியரா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies