ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! - ஜெகதீப் தன்கர்
Oct 6, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! – ஜெகதீப் தன்கர்

Web Desk by Web Desk
Aug 1, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு உரிமைகளை கொண்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது , தேசிய தேர்வு முகமை போன்ற நிறுவனங்களில் தலைவராக பணியமர்த்துவதற்கான தகுதி ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு தான் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜி லால் சுமன் கருத்து தெரிவித்தார்.

உடனடியாக இதனை ஆட்சேபித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இதனை அரசியலாக்கக் கூடாது என்று இந்த அவையில் பலமுறை தான் கூறியிருப்பதாகவும், உறுப்பினர் விதிகளை மீறியதோடு இந்திய அரசியலமைப்பையே காலில் போட்டு மிதித்திருப்பதாகவும் கடுமையாக கூறினார்.

நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த தன்னால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவைத் தலைவர்,  ஒரு உலகளாவிய சிந்தனைக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பகுதியின் கீழ், தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ், நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெகதீப் தன்கர், மேலும் நாட்டின் நலன், நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றிற்காகப் பங்காற்றி வருவதாகவும், அத்தகைய அமைப்பின் உறுப்பினர்களை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கவனித்ததாக தெரிவித்த அவைத்தலைவர், இது ஒரு மோசமான திட்டமிடல் என்றும் , நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு மோசமான வழிமுறை என்று கூறினார்.

இப்படி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயல்படுபவர்கள், நாட்டுக்கும், இந்திய அரசியல் அமைப்புக்கும் பெருந் தீங்கை செய்கிறார்கள் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Tags: jagdeep dhankhar in rajya sabhamallikarjun kharge jagdeep dhankharjagdeep dhankhar newsjagdeep dhankar newsjagdeep dhankhar on rsskharge vs jagdeep dhankharjagdeep dhankhar mallikarjun khargeVice-President Jagdeep Dhankharjagdeep dhankhar vs mallikarjun khargeJagdeep Dhankharmallikarjun kharge vs jagdeep dhankarJagdeep Dhankarjagdeep dhankhar on congressRSS is a global think tank! - Jagadeep Thankarjagdeep dhankhar rajya sabhajagdeep dhankhar speechjagdeep dhankhar sanjay singh
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை ரத்து! – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Next Post

திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! – ராமதாஸ்

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies