இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது படகை வைத்து மோதினர். இதில் 4 தமிழக மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் மலைச்சாமி என்பவர் சடலமாகவும், 2 மீனவர்கள் உயிருடனும் மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு மீனவர் கடலில் மாயமானார்.
இதையடுத்து உயிருடன் மீட்கபட்ட 2 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றது.
இதனிடையே இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.