மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் கணேசன் என்பவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கலைவேந்தன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை அவர் மீது வீசினார்.
இதில் பாடுகாயமடைந்த காவல் ஆய்வாளரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்க அனுமதித்தனர். பின்னர் கலைவேந்தனை கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.