நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மொடக்குறிச்சி, காங்கேயம் பாளையம், நஞ்சை காளமங்கலம், கொடுமுடி ஆகிய ஒன்றியங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றின் பகுதியில் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் தற்காலிக மண் பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது.

பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் இரு கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் பாலம் சேதமடைந்ததால் தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பேச்சிப்பாறையில் திறக்கப்பட்ட உபரி நீரால் தற்காலிக மண் பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டதால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நீலகிரியில் உள்ள பைக்கார அணை முழு கொள்ளளவை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 110 அடி உயரம் கொண்ட பைக்கார அணை நிரம்பியது.

அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாயார் ஆற்றில் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Devotees are prohibited from going to Nattatheeswarar temple
Share
Tweet
SendShare
Previous Post

காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது!

Next Post

இலங்கை கடற்படைக்கு ஓபிஎஸ் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies