அமலாக்கத் துறையினர் தனது வீட்டில் சோதனை நடத்தவிருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்த நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் தொடர்பாக தாம் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, தனது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த தயாரானதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறையிலிருந்தே தனக்கு தகவல் வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அவரை தொடர்புகொண்டு தெரிவித்த அதிகாரியின் பெயரை தெரியப்படுத்துமாறு சவால் விடுத்துள்ளார்.