டெல்லியில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 ஐஏஎஸ் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி பழைய ராஜேந்தர் நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைமையின்கீழ், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் அலட்சியமாக செயல்படுவதால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.