விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அருப்புக்கோட்டை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த பாலமுருகன் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.