நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தக்கூறியதால் போலீசாரிடம் விழா குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பெரிய காடு பகுதியில் நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ண்டிருந்த போலீசார் இரவு நேரம் என்பதால் நிகழ்ச்சியை நிறுத்துமாறு தெரிவித்தனர். இதனால் நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.