பெரம்பலூர் அருகே கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரைச் சேர்ந்த ராணி என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாக கூறப்படும் நிலையில் அவருக்கு நிதி நிறுவன ஊழியர் தொல்லை கொடுத்ததால் ராணி தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் அரசு மருத்துவனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சென்ற உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.