வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொள்ளாச்சியில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல்போன நூற்றுக்கு மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் மற்றும் பொதுமக்கள் சார்பில் மளிகைப் பொருட்கள், ஆடைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.