புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது.இந்நிலையில் கடைகளுக்கு மேல் உள்ள கூரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.