கன்னியாகுமரி மாவட்டம் கடையால் அருகே புகாரளித்து 4 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆல்வினின் வீட்டுக்கு அருகேயுள்ள நிலத்தில் மரங்களை மர வியாபாரியான அகஸ்டின் வெட்டிக்கொண்டிருந்தார். இந்த பணியின்போது ஆல்வின் வீட்டின் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆல்வின், அகஸ்டினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி ஆல்வினின் வீட்டிற்கு 3 பேருடன் வந்த அகஸ்டின், ஆல்வின் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ஆல்வின், மற்றும் அவரது மனைவி பேபி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து புகாரளித்து 4 நாட்களாகியும், நடவடிக்கை எடுக்காததால் கடையால் காவல்நிலையத்தை தங்களது பாட்டியுடன் முற்றுகையிட்ட ஆல்வினின் 3 குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.