மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் மீண்டும் மூடப்பட்டது.
மயிலாடுதுறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த 2017ம் ஆண்டு மூடப்பட்டன.
அதனைத்தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு, மணல்மேடு கடைவீதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக், பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் மூடப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன், டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறந்தனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.