செங்கல்பட்டு மாவட்டம், பாண்டூரில் அடுத்தடுத்து அமைந்துள்ள கடைகளில் சுவரில் துளையிட்டு நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன.
பாண்டூர் மெயின் சாலையில் அடுத்தடுத்து 4 கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளை வழக்கம்போல் அவற்றின் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பக்கவாட்டு சுவரை துளையிட்டு 60 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.