தன் மீது போடப்படும் அனைத்து வழக்குகளுக்கும் உதயநிதி ஸ்டாலினே காரணம் என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் யூ- டியூபர் சவுக்கு சங்கர் சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, பார்முலா ஒன் கார் பந்தயம் முடியும் வரை தான் வெளியே வரக்கூடாது என்பதற்காகவே உதயநிதி ஸ்டாலினின் தூண்டுதலால் வழக்குகள் போடப்படுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.