புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தெற்கு பொதுக்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்ற மீனவர் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அவர் வலையில் அரியவகை கடல்வாழ் உயிரினமான கடற்பசு சிக்கியது.
இதையடுத்து அந்த கடற்பசுவை மீனவர் கருப்பையா பத்திரமாக கடலில் விட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் மீனவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.