நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான அமண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6க்கு3 என்ற புள்ளிக்கணக்கில் ஜெசிகா பெகுலாவும், 2வது செட்டை 6க்கு2 என்ற கணக்கில் அமண்டா அனிசிமோவாவும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா, 6க்கு1 என்ற கணக்கில் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தினார்.