வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு மீது இரவு ஒன்பது முப்பது மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.
இதை தொடர்ந்து தமக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் எனக் கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு மீது இன்றிரவு ஒன்பது முப்பது மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.