நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அறிக்கையில் தமிழகம் சிவப்பு நிற எச்சரிக்கையில் உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் தமிழக பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் கிரீன் கலாம் இயக்கத்தின் சார்பாக நடிகர் விவேக் மனைவி அருள் செல்விக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் மேடையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அடுத்த 26 ஆண்டுகளில் தமிழகத்தில் பெருமளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவிலேயே மிகவும் மோசமான நதி கூவம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 12 சதவீதம் நெல் மகசூல் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார்.