புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற யு.கே.ஜி மாணவர்கள் இருவர் 250 சொற்களை இரண்டு நிமிடத்திலும், 300 ஆங்கில வார்த்தைகளை நான்கு நிமிடத்திலும் வாசித்து அசத்தினர்.
புதுச்சேரியை சேர்ந்த ஆதித்யா மற்றும் கிஷான் ஆகிய இருவரும் மூலகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், சிறுவன் ஆதித்யா, 300 ஆங்கில வார்த்தைகளை 4 நிமிடம் 9 நொடிகளில் வாசித்தும், சிறுவன் கிஷான் 250 ஒத்த ஓசையுடைய சொற்களை 2 நிமிடங்கள் 32 வினாடிகளில் வாசித்தும் சாதனை படைத்தனர்-