சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியகொடியை ஏற்றி வைத்தார்.
நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது.