சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகர், கோகுலாபுரம் உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அதேப்போல், சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் பேரணி நடைபெற்றது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற வாகன பேரணியை கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தொடங்கி வைத்தார்.