2026ல் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றும் வாய்ப்பை மக்கள் அளிப்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூவர்ண கொடியை ஏற்றினார். இந்த விழாவில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் 2026ல் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றும் வாய்ப்பை பாஜகவுக்கு மக்கள் அளிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.