நாட்டின்78வது சுதந்திர தினத்தையொட்டி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தேசிய கொடி ஏற்றினர்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமதாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றிய மத்திய வெளியுறவத்துறை அமைச்சசர் எஸ். ஜெய்சங்கர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.