இஸ்லாமியர் வரவேற்கும் வக்ஃப் திருத்த மசோதா!
Oct 15, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர் வரவேற்கும் வக்ஃப் திருத்த மசோதா!

Web Desk by Web Desk
Aug 16, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்தலாக்கை தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு இஸ்லாமியர்களில் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்தங்கிய இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு சொத்தும் வக்ஃப் என்ற சொல் குறிக்கிறது. நாட்டில் ஒரு சொத்து வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டவுடன், அது அரசால் கூட திரும்பப் பெற முடியாததாகி விடுகிறது.

இந்தியாவில், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியமே உரிமையாக வைத்திருக்கிறது. இதனால் வக்ஃப் வாரியமே இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் ஆகும்.

நாடு முழுவதும் 1.2 லட்சம் கோடி மதிப்பிலான 9 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு உள்ளன. இவை 32 மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த வக்ஃப் வாரிய சொத்துக்கள் சுயமாக நியமிக்கப்பட்ட 200 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த சொத்துகள், சம்பந்தமாக சுமார் ​​40,000 வழக்குகள் வக்ஃப் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன. பிரத்தியேகமாக வக்ஃப் அதிகாரத்தில் உள்ள உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடிவதில்லை.

இதனால், அத்துமீறல்கள், முறைகேடுகள், உரிமை தகராறுகள் மற்றும் பதிவு மற்றும் கணக்கெடுப்பில் குளறுபடிகள் போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை தற்போதைய வக்ஃப் வாரிய அமைப்பில் உள்ள நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழலை எடுத்துக் காட்டுகிறது.

வக்பு சொத்துக்களை கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் 1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

எனினும், வக்பு வாரிய முறைகேடுகள் தொடர்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 123 வக்ஃப் சொத்துக்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃப் வாரியம், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஒரு முழு கிராமத்திற்கும் உரிமை கொண்டாடியது. மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் சன்னி வக்ஃப் வாரியமும் தாஜ்மஹாலுக்கு உரிமை கொண்டாடியது என வக்ஃப் வாரிய அத்துமீறல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.

வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 40, ஒரு சொத்து வக்ஃப் சொத்தாக கருதப்படுகிறதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களுக்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை வக்பு வாரிய உறுப்பினர்கள் நில அபகரிப்புக்கு தவறாக பயன்படுத்துவதாக பல புகார்கள் வந்துள்ளன.

இந்த மசோதாவில், வக்பு வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறது. மேலும், இஸ்லாம் மதம் சாராதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த புதிய மசோதாவில், மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியராக இல்லையென்றாலும், வக்பு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு தரப் பட்டிருக்கிறது.

மேலும் வக்ஃப் வாரியங்கள் எந்த நிலத்தையும் முறையான ஆவணங்கள் இல்லாமல் அபகரிப்பதைத் தடுக்கும் இந்த மசோதா, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடுவதற்கு வழிவகை செய்யும் இந்த மசோதா, ஒரு நிலத்தை வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்பந்தப்பட்டோருக்குத் தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு இஸ்லாம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம், முத்தலாக் நடைமுறையைத் தடை செய்தது. திருமணமான இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், ஒருதலைப்பட்சமான தலாக் அறிவிப்புகள் செய்வதையும் இந்த சட்டம் கட்டுப்படுத்தியது.

இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பை மேம்படுத்தும் முத்தலாக் சட்டம், ஆரம்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், பின்னர் இஸ்லாமிய சமூகத்தினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது போல், இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு இஸ்லாமியர்களின் பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags: Waqf amendment bill welcomed by Muslims!
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் வளர்ச்சி-ஓர் ஓப்பீடு!

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV D-3 ராக்கெட்!

Related News

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies