இஸ்லாமியர் வரவேற்கும் வக்ஃப் திருத்த மசோதா!
Apr 29, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர் வரவேற்கும் வக்ஃப் திருத்த மசோதா!

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்தலாக்கை தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு இஸ்லாமியர்களில் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்தங்கிய இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு சொத்தும் வக்ஃப் என்ற சொல் குறிக்கிறது. நாட்டில் ஒரு சொத்து வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டவுடன், அது அரசால் கூட திரும்பப் பெற முடியாததாகி விடுகிறது.

இந்தியாவில், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியமே உரிமையாக வைத்திருக்கிறது. இதனால் வக்ஃப் வாரியமே இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் ஆகும்.

நாடு முழுவதும் 1.2 லட்சம் கோடி மதிப்பிலான 9 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு உள்ளன. இவை 32 மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த வக்ஃப் வாரிய சொத்துக்கள் சுயமாக நியமிக்கப்பட்ட 200 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த சொத்துகள், சம்பந்தமாக சுமார் ​​40,000 வழக்குகள் வக்ஃப் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன. பிரத்தியேகமாக வக்ஃப் அதிகாரத்தில் உள்ள உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடிவதில்லை.

இதனால், அத்துமீறல்கள், முறைகேடுகள், உரிமை தகராறுகள் மற்றும் பதிவு மற்றும் கணக்கெடுப்பில் குளறுபடிகள் போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை தற்போதைய வக்ஃப் வாரிய அமைப்பில் உள்ள நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழலை எடுத்துக் காட்டுகிறது.

வக்பு சொத்துக்களை கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் 1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

எனினும், வக்பு வாரிய முறைகேடுகள் தொடர்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 123 வக்ஃப் சொத்துக்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃப் வாரியம், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஒரு முழு கிராமத்திற்கும் உரிமை கொண்டாடியது. மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் சன்னி வக்ஃப் வாரியமும் தாஜ்மஹாலுக்கு உரிமை கொண்டாடியது என வக்ஃப் வாரிய அத்துமீறல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.

வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 40, ஒரு சொத்து வக்ஃப் சொத்தாக கருதப்படுகிறதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களுக்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை வக்பு வாரிய உறுப்பினர்கள் நில அபகரிப்புக்கு தவறாக பயன்படுத்துவதாக பல புகார்கள் வந்துள்ளன.

இந்த மசோதாவில், வக்பு வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறது. மேலும், இஸ்லாம் மதம் சாராதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த புதிய மசோதாவில், மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியராக இல்லையென்றாலும், வக்பு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு தரப் பட்டிருக்கிறது.

மேலும் வக்ஃப் வாரியங்கள் எந்த நிலத்தையும் முறையான ஆவணங்கள் இல்லாமல் அபகரிப்பதைத் தடுக்கும் இந்த மசோதா, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடுவதற்கு வழிவகை செய்யும் இந்த மசோதா, ஒரு நிலத்தை வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்பந்தப்பட்டோருக்குத் தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு இஸ்லாம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம், முத்தலாக் நடைமுறையைத் தடை செய்தது. திருமணமான இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், ஒருதலைப்பட்சமான தலாக் அறிவிப்புகள் செய்வதையும் இந்த சட்டம் கட்டுப்படுத்தியது.

இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பை மேம்படுத்தும் முத்தலாக் சட்டம், ஆரம்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், பின்னர் இஸ்லாமிய சமூகத்தினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது போல், இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு இஸ்லாமியர்களின் பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags: Waqf amendment bill welcomed by Muslims!
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் வளர்ச்சி-ஓர் ஓப்பீடு!

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV D-3 ராக்கெட்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies