திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அனுமதியின்றி ஏரியில் மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெக்குப்பட்டு ஊராட்சியில் அரசு சார்பில் விவசாய நிலங்களுக்கு ஏரியிலிருந்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி யுவராஜ் அனுமதி வழங்காத விவசாயிகள் பெயரில் ஏரியிலிருந்து மண் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மண் அள்ளி வந்த லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் மண்ணை கொட்டிய பின் லாரியை விடுவித்தனர்.