குற்றாலம் சாரல் திருவிழாவை காண சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், 3ஆம் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெண்களுக்கான கோலப்போட்டி, ஆண்களுக்கான ஆணழகன் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, நவீன காலத்தில் உள்ள சினிமா பாடல்களுக்கு ஏற்ப கலைஞர்கள் பரதமாடி தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.