திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் இதுநாள் வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏலகிரி கிராமத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயம் நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வராததால், சுபகாரிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ள இடவசதி இல்லாமல் அவதியுற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.