ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தொழிலாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
கீழ அரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காததால் தொழிலாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். மேலும், சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.