சென்னை பாடி அருகே உள்ள படவட்டம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழாவையொட்டி பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பாடி படவட்டம்மன் கோயிலின் 43-வது ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவத்தில் ஆயிரத்து 8 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.