விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த 5 வயது சிறுவனான அருண் கார்த்திக் என்பவர், சுமார் 17.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக ஓடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
தனியார் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நோபல் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறுவன் அருண் கார்த்திக் ஓடத் தொடங்கினார்.
தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் பள்ளி மைதானத்தை 43 முறை சுற்றி வந்து உலக சாதனை நிகழ்த்தினார். இதனையடுத்து பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறுவன் பாராட்டப்பட்டார்.