விடுமுறையையொட்டி வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவை சேர்ந்த அக்சத் ஹர்சானா, ஹரியானாவை சேர்ந்த சுபித் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தனர்.
இந்நிலையில் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல எண்ணிய இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். கிணத்துக்கடவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.