திருச்சி அருகே கனமழை காரணமாக அரசு பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
திருச்சியில் இருந்து துறையூருக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்ததால் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தனர்.
புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.