சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்ட சிறையில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க வழங்கப்படும் பொருட்களை துணை சிறை அலுவலர் பதுக்கி கடத்தியது தெரியவந்துள்ளது.
ஆத்தூர் மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை துணை சிறை அலுவலர் வைஜெயந்தி பதுக்கி கடத்துவதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உணவு பொருட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து வைஜெயந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.