உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக முக்கிய சாலைகளான சேரிங்கிராஸ், படகு இல்லம், ரயில் நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.