சேலத்தில் ஆயதப்படை பெண் காவலர்களுக்கான தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேலம் வின்சென்ட் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் தேர்வுக்காக அதிகாலை 4 மணி முதல் பெண்கள் குவிந்தனர்.
4 நாட்கள் நடைபெறும் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான தேர்வில், முதல் நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் மார்பளவு தேர்வுகள் நடைபெறுகின்றன.
சேலத்தில் முதல் நாள் தேர்வுக்கு 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், 200 பெண்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.