கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் ஒன்றிணைந்து வீ வான்ட் ஜஸ்டிஸ் ஆர்ஜிகர் என்ற வடிவில் நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதன் ட்ரோன் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.