மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் நடிக்க வைக்க அனுமதி அளித்ததற்காக சென்னை விருகம்பாக்கத்தில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என செய்திகள் வெளியாகின.
இதற்கு ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.