ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் ஆய்வாளர் வீரமரணம் அடைந்தார்.
உதம்பூர் மாவட்டம் டுடு பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், உள்ளூர் காவல் துறையினரும் இணைந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் ஆய்வாளர் உயிரிழந்தார். தொடர்ந்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர்.