திருச்சி மாநகராட்சியுடன் 27 ஊராட்சிகளை இணைப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க மாவட்ட தலைவர் சின்னதுரையை போலீசார் கைது செய்தனர்.
தாளக்குடி, நாகமங்கலம் உள்ளிட்ட 27 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதனை கண்டித்து விவசாய சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தண்ணீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சின்னதுரையை போலீசார் கைது செய்தனர்.