டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. .இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரின் நீதிமன்ற காவலை வரும் 27-ம் தேதி வரை நீதிபதி காவேரி பாவேஜா,நீட்டித்து உத்தரவிட்டார்.